Thursday, August 29, 2013

 15 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா







ஒரு பாட்டுக்கு ஆடி, நடன நடிகராக இருந்து டான்ஸ் மாஸ்டராக உருவெடுத்தவர் பிரபுதேவா. அதையடுத்து கதாநாயகனாகவும் உயர்ந்தார். ஆனால், மார்க்கெட் டவுனானபோது திடுதிப்பென்று இயக்குனர் அஸ்திரத்தை கையிலெடுத்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்தின் மீது இங்குள்ள ஹீரோக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் ஹிட் கொடுத்ததையடுத்து தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், ஓரிரு படங்களை இயக்கி வந்தநேரம் இந்திப்படவாய்ப்பு கிடைக்க, இப்போது அங்கே முழுநேர இயக்குனராகி விட்டார். இயக்கி வரும் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவரது இயக்கத்தில் நடிக்க மேல்தட்டு ஹீரோக்கள் முண்டியடிக்கிறார்கள். இதனால் பேசப்படும் இயக்குனராகி விட்ட பிரபுதேவாவின் சம்பளமும் இப்போது கிடுகிடுவென்று உயர்ந்து 15 கோடியை எட்டியுள்ளதாம்.
அதனால்தான் தென்னிந்திய படாதிபதிகள் அவரை படம் இயக்க அழைக்கிறபோது, படம் இயக்குவதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இப்போது எனது சம்பளம் 15 கோடி. அதை உங்களால் தர முடியும் என்றால், நான் ஓ.கே என்கிறாராம். அதைக்கேட்டு ஆடிப்போகும் படாபதிபதிகள், நாம் ஹீரோ, ஹீரோயினி, டைரக்டர் ஆகிய மூன்று பேருக்கும் கொடுக்கிற மொத்த சம்பளத்தை இவர் ஒரே ஆளு கேட்டா எப்படி என்று அடுத்த நிமிடமே போனை கட் பண்ணி விடுகிறார்களாம்.

No comments:

Post a Comment